தஞ்சைமாவட்டத்தில் அரசு பொறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்புசெய்து சாஸ்த்ராபல்கலைகழகம் கட்டிடம் அரசுநிலத்தைமீட்டு வீடில்லாஏழைவிவசாயிகளுக்கு வீட்டுமனைபட்டா வழங்கோரிஇந்தியவிவசாயசங்கம் போராட்டம்
. தஞ்சையை அடுத்துள்ள திருமலை சமுத்திரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள அரசு புறம்போக்கு நிலத்தை உடனடியாக மீட்டு அதை குடிமனை இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு பட்டாவுடன் குடிமனை வழங்கக்கோரி தஞ்சாவூரில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தஞ்சாவூரை அடுத்துள்ள திருமலை சமுத்திரம் கிராமத்தில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் திறந்தவெளி சிறைச்சாலை அமைக்க சிறைத்துறைக்கு தமிழக அரசு ஒதுக்கியிருந்த 31.37 ஏக்கர் பரப்பிலான அரசு புறம்போக்கு நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் ஒத்துழைப்புடன் கடந்த 35 ஆண்டுகளாக இப்பல்கலைகழகம் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து அதில் கட்டடங்கள் கட்டியுள்ளது. இந்நிலையில் கடந்த 35 ஆண்டுகளாக தாங்கள் அனுபவித்து வரும் அரசு புறம்போக்கு நிலத்தை தங்களுக்கு ஒதுக்கும்படியும், இதற்காக வித்தியாசத் தொகையை செலுத்த தயாராக இருப்பதாகவும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் கோரிக்கை வைத்தது. ஆனால் இந்த கோரிக்கையை நிராகரித்த தமிழக அரசு நான்கு வாரங்களுக்குள் இடத்தை காலி செய்யும்படி தஞ்சாவூர் வட்டாட்