கரூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.அய்யர்சாமி அவர்கள் தலைமையில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஏ.சுந்தரவதனம் (இ.கா.ப) அவர்களுக்கு அலங்கார அணிவகுப்பு வழங்கப்பட்டது.


 கரூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில்  ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.அய்யர்சாமி அவர்கள் தலைமையில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஏ.சுந்தரவதனம் (இ.கா.ப) அவர்களுக்கு அலங்கார அணிவகுப்பு வழங்கப்பட்டது.மாவட்டத்தில் இயங்கி வரும் தற்காலிக காவலர் பயிற்சி பள்ளி உணவகத்தை பார்வையிட்டு உணவு பட்டியலில் காவலர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வழங்க பரிந்துரைத்தார்.


மேலும் மாவட்டத்தில் இயங்கி வரும் துப்பறியும் மோப்ப நாய் படைப்பிரிவுகளை ஆய்வு செய்தார்.

மற்றும் ஆயுதப்படை வளாகத்தில் இயங்கி வரும் குழந்தை காப்பகத்தையும், ஆயுதப் படையில் உள்ள காவலர் குடியிருப்புகளையும் ஆய்வு செய்தார்.காவலர்கள் குறைகளையும் கேட்டறிந்தார்.

ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் காவலர்களுக்கு,  பொதுமக்களுக்கும் காவலர்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்ப்படுத்தும் விதமாக பணிபுரியுமாறு அறிவுரை வழங்கினார்.

நிருபர்.ஜெயபிரகாஷ்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.