அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி.போதைப்பொருட்களை தவிர்ப்போம்!தடுப்போம்!! இளம் தலைமுறையினரை காப்போம்!!!


அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படி 26.06.2022  சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு  ஜெயங்கொண்டம் நகரத்தில் காவல்துறை சார்பில் ஜெயங்கொண்ட உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.கலைகதிரவன் அவர்கள் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



 இப்பேரணியில் குமார் பாரா மெடிக்கல் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், காவல்துறை அதிகாரிகள் பெரும்பாலானோர் பேரணியில் கலந்து கொண்டனர். பேரணி ஜெயங்கொண்டம் யூனியன் ஆபீஸ் அருகே தொடங்கி ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் முடிவுற்றது. போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள், குற்றங்கள் மற்றும் இளம் தலைமுறையினரின் வாழ்க்கை சீரழிவு முதலியவற்றை எடுத்துரைக்கும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

REPORTER..ம.மஹேஷ்.அரியலூர்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.