திருநெல்வேலி ரூ. 2 லட்சத்து 90 ஆயிரம் பணத்தை மீட்டுக்கொடுத்த மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர்



திருநெல்வேலி  மாவட்டம், சுத்தமல்லி, பாரதியார்நகரை சேர்ந்த செல்லத்துரை என்பவர் இணையதளத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக வந்த விளம்பரத்தை நம்பி ரூ.3 இலட்சம் பணத்தை இணையதளம் மூலமாக செலுத்தி பணத்தை இழந்துள்ளார். இந்நிலையில் செல்லதுரை பணத்தை மீட்டுத்தருமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன், IPS அவர்களிடம் மனு அளித்தார். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. மாரிராஜன் அவர்களுக்கு உத்தரவிட்டதன் பேரில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திரு.ராஜ் அவர்கள், உதவி ஆய்வாளர் திரு.ராஜரத்தினம், அவர்கள் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு உடனடியாக செல்லத்துரை என்பவருடைய ரூபாய் 2 இலட்சத்து 90 ஆயிரம் பணத்தை மீட்டு அதற்கான ஆவணத்தை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P.சரவணன் IPS அவர்கள் பணத்தின் உரிமையாளரிடம்  22.06.2022  மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.

இவ்வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு ரூபாய் 2 லட்சத்து 90 ஆயிரம் பணத்தை  உரிமையாளரிடம் ஒப்படைத்த திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P.சரவணன், IPS அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.

தலைமைநிருபர்.S.சண்முகநாதன்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.