தூத்துக்குடி மாவட்டம்காவல்துறைசார்பாக மாற்றத்தைதேடிநிகழ்ச்சிமூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுஏற்படுத்தியகாவல்துறையினர்.



தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.L. பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய போலீசாரும் தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் "மாற்றத்தை தேடி" என்னும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலமாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.


அதன்படி  (28.06.2022) தூத்துக்குடி தென்பாகம், எட்டையாபுரம் மற்றும் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொதுமக்களிடம் "மாற்றத்தை தேடி" விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலமாக கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், போக்சோ சட்டங்கள் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் இந்நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக காவல்துறையினரின் முன்னிலையில் கீழ் கண்டவாறு உறுதிமொழி ஏற்கப்பட்டது.  ‘நாம் நமக்காகவும் நம் சந்ததியினருக்காகவும் சாதி, மத வேற்றுமைகள் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவோம். எதிர்மறை சிந்தனைகளை களைந்து பழிக்குப் பழி என்ற எண்ணம் நீங்கி நற்சிந்தனைகளை வளர்த்து மகளிரையும் குழந்தைகளையும் மக்களையும் பாதுகாப்போம். எந்த சூழ்நிலையிலும் எக்காரணம் கொண்டும் கத்தி, அரிவாள் மற்றும் எந்த கொடிய ஆயுதங்களையும் பயன்படுத்த மாட்டோம்” என்னும் உறுதிமொழியை கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவரும் ஏற்று  உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நிருபர்கள்.N.ராமசாமி,அய்யப்பன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.