திருநெல்வேலி மாவட்டத்தில் கஞ்சா குற்றவாளிகளை கைது செய்த இளம் உதவி ஆய்வாளர்களுக்குSP.P.சரவணன்IPS பாராட்டு.



 தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள், தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க  ஆபரேஷன் 2.0 வினை செயல்படுத்தியுள்ளார். இதன்படி, கஞ்சா வழக்குகளில்  சம்மந்தப்பட்ட எதிரிகள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களின் வங்கி கணக்குகளை முடக்க  தென்மண்டல ஐ.ஜி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

 அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினருக்கு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. சரவணன் IPS அவர்கள் அறிவுறுத்தயிருக்கும் நிலையில், அறிவுரையின் படி மாவட்ட காவல்துறையினர் கடந்த சில நாட்களாக கஞ்சா சம்பந்தமான ரோந்துபணி செய்து வரும் நிலையில் தாழையூத்து காவல் உதவி ஆய்வாளர்  திரு. இன்னோஸ்குமார், பழவூர் காவல் உதவி ஆய்வாளர்  திரு.பார்த்திபன், தனிப்படை உதவி ஆய்வாளர் திரு. ஆண்டோ பிரதீப், ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் கஞ்சா விற்பனை செய்த 4 நபர்களை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு  விசாரணையில் உள்ள வழக்குகளின் எதிரிகள் மற்றும் அவரது உறவினர்கள் ஆகியோரின் 12 வங்கி கணக்குகளும், அவற்றில் இருந்த ரூபாய் 98,343/-  முடக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொண்ட உதவி ஆய்வாளர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து பரிசு வழங்கி பாராட்டினார். மேலும் இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,  இனிவரும் காலங்களில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது  தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்SP.P.சரவணன்IPS தெரிவித்துள்ளார்.

தலைமைநிருபர்.S.சண்முகநாதன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.