கோவை மாவட்டம் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தலைமைக் காவலரை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர். பத்ரிநாராயணன் IPS
தேசிய அளவிலான மூத்தோர் தடகளப் போட்டி கடந்த 16.06.2022 முதல் 19.06.2022 தேதி வரை குஜராத்தில் வதோதரா என்னுமிடத்தில் நடைபெற்றது.இதில் Master தடகள போட்டியில் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் 1710 திரு. கோவிந்தராஜ் அவர்கள் கலந்துகொண்டு 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதனை பாராட்டும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன் IPS அவர்கள் (22.06.2022) மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி, பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் இச்செயல் காவல் துறையினரிடையே தங்களது திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது.
நிருபர்.P.நடராஜ்
Comments
Post a Comment