தேசிய கராத்தே போட்டியில் பதக்கங்களை பெற்ற வீரர்களுக்கு விழுப்புரம் மாவட்ட SP.ஶ்ரீநாதா IPS பாராட்டு.
இந்திய ஊரக விளையாட்டு துறைதேசிய கராத்தே போட்டி* 2022 இடம்: இராசிபுரம்/ நாமக்கல் மாவட்டம். தேசிய அளவில்நடைபெற்றககராத்தேபோட்டியில்விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் தேசியஅளவில் 3- தங்கம், 6 - வெள்ளி, 2- வெண்கலம். பதக்கங்களை வென்று சாதனை படைத்த பூங்கோதை, சித்தார் சிவம், இளமாறன், கனகஜோதி, சுதர்சன், ஶ்ரீராம் மற்றும் ரஞ்சித் குமார் ஆகியோர் எய்ம்ஸ் கராத்தே மற்றும் யோகா அகாடமி பயிற்சியாளர்கள் திரு. சென்சாய் ரகுராமன்,செம்பாய், கனகஜோதி மற்றும் செல்வராஜ் ஆகியோரின் தலைமையில் 29-04-22 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஶ்ரீநாதா IPS., அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும் பூங்கோதை, இளமாறன் மற்றும் கனகஜோதி உலக அளவில் நடைபெற இருக்கும் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .நிருபர்.ராமநாதன்