கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 9 நபர்கள் கைது...6.800 கிலோ கஞ்சா பறிமுதல்... காவல்துறையின் அதிரடி நடவடிக்கை மாவட்ட SP.பத்ரிநாராயணன் IPS பாராட்டு


கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன் IPS அவர்கள் உத்தரவின் பேரில்  (28.04.2022)மாவட்டம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில்.


                                               
                                                                                                                                                                                  பொள்ளாச்சி மேற்கு காவல்      நிலையஎல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் திருமதி. அனந்தநாயகி அவர்கள்  சம்பவ இடத்திற்கு விரைந்து  சென்று கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெஷன்ட் நாத் என்பவரது மகன் பிரசாந்குமார் நாத்(36) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 4.200 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்கந்தே கவுண்டன் சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான திருமலையம்பாளையம் பகுதியில் காவல்உதவி ஆய்வாளர்    திரு. சரவணன்அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த  மதுக்கரை பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவரது மகன் பிரபாகர் (26) மற்றும்   வேலுசாமி  மகன்    அஜித்குமார் (25) ஆகிஇருவரையும்  கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 1.100 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்தார்.





 காரமடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் திரு. குமார் அவர்கள்  சம்பவ இடமான தாயனூர் மணல் புதூர் பகுதிக்கு விரைந்து சென்று அங்கு கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சிவசக்திவேல் (21), கருப்புசாமி(21), காரமடை பகுதியைச் சேர்ந்த அபிஷேக் (21)  கார்த்திகேயன் (20), கிரண்குமார் (23)மற்றும் கார்த்தி (25)ஆகிய 6 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 1.500 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம்-2 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


 கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 9 நபர்களை கைது செய்தும் அவர்களிடமிருந்து சுமார் 6.800 எடையுள்ள கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம்-3 ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து, பறிமுதல் செய்த காவல்துறையினரை உயரதிகாரிகள் வெகுவாக பாராட்டினார்கள்.இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.திரு.பத்ரிநாராயணன் IPS  அவர்கள் எச்சரித்துள்ளார்.சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்

.நிருபர் .கோவிந்தசாமி.





Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.