பொன்னமராவதி காவல் சரகம்.ஏனாதி கிராமத்தில் வீடுகட்டுமானபணி செப்டிடேங்க் குழிதோண்டியபோதுகிடைத்த புதையல்குடுவை.
பொன்னமராவதி காவல் சரகத்திற்கு உட்பட்ட ஏனாதி கிராமத்தில் 26.04.22 ஆம் தேதி 11.00 மணி அளவில் ஜெயலட்சுமி Wo, நாகராஜன்,(SC/PL)
என்பவர் வீட்டிற்கு முன்பு செப்டிக் டேங்க் குழி தோண்டும்போது சிறிய மண் குடுவை மூடிய நிலையில் இருந்ததைப் பார்த்து சந்தேகப்பட்டு வேலை பார்த்தவர்கள் உரிமையாளர் ஜெயலட்சுமி இடம் கூறியுள்ளனர் அவர் மண் குடுவையை உடைத்து பார்த்தபோது உள்ளே 16 தங்க காசுகள் இருந்துள்ளது.தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு VAo ஆரோக்கியராஜ் அவர்களுடன் சென்று பொருளை மீட்டு தாலுகா அலுவலகம் கொண்டுவரப்பட்டு 15.00 மணிக்கு பொன்னமராவதி வட்டாட்சியர் திருமதி ஜெயபாரதி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவரது உத்தரவின் பேரில் மேலச்சிவபுரி கிராம நிர்வாக அதிகாரி ஆரோக்கிய ராஜ் மற்றும் வட்ட ஆய்வாளர் திருமதி. திலகா ஆகியோர் தங்க காசுகளை பொன்னமராவதி ஸ்டேட் பேங்க் நகை மதிப்பீட்டாளர் முன்னிலையில் நகை எடை போடப் பட்டது.
உடன் உதவி ஆய்வாளர் திரு.ரகுராமன்,SSI திரு, ஸ்ரீதர் ஆகியோர் இருந்தனர்.
மொத்த எடை 62.500grஅதன் மதிப்பு₹2,50,000/-பின்பு வட்டாட்சியர் அலுவலகம் கொண்டு வரப் பட்டது.
மேற்கண்ட புதையல் தங்க நாணயத்தை பொன்னமராவதி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது .
சிறப்பு நிருபர். மு.பாண்டியராஜன்
Comments
Post a Comment