27ஆண்டுளுக்கு முன் போலி ஆவணம் மூலம் ஏமாற்றிய ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள 2½ சென்ட் நிலத்தை, 3 மாத காலத்திற்குள் மீட்க காரணமாக இருந்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர்திருநெல்வேலி மாவட்ட SP.P.சரவணன் IPS பாராட்டு.



திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம், ஜோதிபுரத்தை சேர்ந்த மரியபரிபூரணம் (60) என்பவருக்கு அரசால் இலவசமாக வழங்கப்பட்ட  2½ சென்ட் இடம் ஜோதிபுரத்தில்  உள்ளது. மரியபரிபூரணம் என்பவருக்கு கணவர்  மற்றும் குழந்தைகள்  இல்லாத நிலையில் தனியாக இருந்து  கூலி வேலை செய்து வருகிறார். மேற்படி   இலவசபட்டா இடத்தை  போலி ஆவணம் மூலம்‌  வேறு ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்ததையடுத்து  மரியபரிபூரணம் 27 ஆண்டுகளாக நிலத்தை மீட்க போராடி வந்துள்ளார். இந்நிலையில்  மேற்படி நிலத்தினை மீட்டுத்தருமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன், IPS அவர்களிடம் கடந்த 3 மாதத்திற்கு முன்  மனு அளித்தார். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு  பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயபால் பர்னபாஸ் அவர்களுக்கு உத்தரவிட்டதன் பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு  ஆய்வாளர்  திருமதி.சாந்தி அவர்கள், உதவி ஆய்வாளர் திருமதி. மகேஸ்வரி அவர்கள், தலைமைக் காவலர் திரு.நாகராஜன்,‌ ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு மரிய பரிபூரணத்திற்கு சொந்தமான ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான நிலத்தை 3 மாத காலத்திற்குள் மீட்டு  அதற்கான ஆவணத்தை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P.சரவணன்IPS அவர்கள் நில உரிமையாளர் மரியபரிபூரணம் அவர்களிடம்  25.04.2022  மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.

மேற்படி மனு மீது  திறம்பட விசாரணை மேற்கொண்டு ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள நிலத்தினை உடனடியாக மீட்டு நிலத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்த திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு  பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன், இ.கா.ப., அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.

தலைமைநிருபர்.S.சண்முகநாதன்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.