சென்னையில் பேருந்துகளில் விலை உயர்ந்த செல்போன்களை பறித்துச் செல்லும் கொள்ளையர்கள் கைதுதுணைஆணையர் கார்த்திகேயன்IPS தலைமையில் வேப்பேரி காவல் உதவி ஆணையர் ஹரிகுமார் காவல் குழுவினர் அதிரடி
துணை ஆணையர் திரு. கார்த்திகேயன்IPS
உதவி ஆணையர் திரு.ஹரிகுமார்,
காவல்ஆய்வாளர்.கண்ணன
சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால் IPS அவர்களின் உத்தரவின் பேரிலும் தெற்குமண்டல கூடுதல் ஆணையர் திரு. கண்ணன் IPS அவர்கள் மேற்பார்வையிலும் காவல் இணை ஆணையர் கிழக்கு மண்டல திரு. பிரபாகரன் IPS அவர்கள் வழிகாட்டுதலின் பேரிலும் கீழ்ப்பாக்கம் காவல் மாவட்ட துணை ஆணையர் திரு. கார்த்திகேயன்IPS அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு வேப்பேரி காவல் உதவி ஆணையர் திரு.ஹரிகுமார்,காவல்ஆய்வாளர்.கண்ணன் காவல் குழுவினர் இணைந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த மர்ம நபர்களை காவல் குழுவினர் தேடிவந்த நிலையில் ஒவ்வொரு செல்போனின் . I E M I .வைத்து GPS கருவிகள் மூலம் செல்போன்கள் இருக்கும் இடத்தை கண்டறியப்பட்டு உமாபதி என்பவனை பிடித்து வேப்பேரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணையில் செல்போன் இருட்டில் ஈடுபட்ட தாக ஒப்புக்கொண்டனர்
செல்போன் திருட்டு கூட்டாளியான ஆட்டோ ஓட்டுனர் விநாயகம் 45 தரகராக வேலை செய்துவந்த சரவணன் 30 நரேஷ் குமார் 30 நண்பர்களையும் பிடித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தபோது உமாபதி தனது கூட்டாளிகளுடன் குழுவாக செயல்படுவார் என்பதும் இந்த குழு ஒவ்வொரு அரசு பேருந்து களில் ஏறும் பயணிகளை நோட்டமிட்டு அவர்களில் யாரிடம் விலை உயர்ந்த செல்போன்கள் உள்ளது என்று ஆராய்ந்து அதே பேருந்துகளில் ஏறிக்கொண்டு அவர்களிடம் இருந்து செல்போன்களை திருடி பின்னர் பேருந்தை விட்டு திடீரென இறங்கி அரசு பேருந்தை பின் தொடர்ந்து வரும் கூட்டாளியான ஆட்டோ விநாயகம் என்பவரின் ஆட்டோவில் ஏறி தப்பி விடுவார்கள் பிறகு ஆட்டோவை பின் தொடர்ந்து வரும் இரு சக்கர வாகனத்தில் வரும் நரேஷ் என்கிறவன் தண்டையார்பேட்டை பகுதி கடையில் 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போனை 18 ஆயிரம் ரூபாய் அல்லது 15 ஆயிரம் ரூபாய் விலையில் விற்பனை செய்துவிட்டு மறைந்து விடுவார்கள் இவர்களை கண்காணிக்கும் சரவணன் மற்றும் உமர் பாரூக் என்பவருக்கு பணத்தில் சரிபாதியாக பிரித்து கொள்வார்களாம் காவல் துறையினர் விசாரணையில் 5 பேர் கொண்ட இந்த செல்போன் திருடர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் ஒரு ஆட்டோ மற்றும் 108 செல்போன்களை காவல் உதவி ஆணையர் ஹரிகுமார்காவல்ஆய்வாளர்.கண்ணன். குழுவினர் பறிமுதல் செய்து 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் சென்னையில் தொடர்ந்து செல்போன் திருட்டில் ஈடுபட்ட வழிப்பறி கும்பலை தீவிர விசாரணை மேற்கொண்டு கைது செய்து திறம்பட செயல்பட்ட காவல்துணைஆணையர் திரு.கார்த்திகேயன் IPS தலைமையிலான காவல்குழுவினர் உதவி ஆணையர் ஹரிகுமார் ,காவல்ஆய்வாளர் கண்ணன் காவல் குழுவினரை காவல் ஆணையர் திரு.சங்கர் ஜிவால்IPS மற்றும் காவல் துறை மேல் அதிகாரிகள் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது
நிருபர் சந்தன்
Comments
Post a Comment