கோவை வடவள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காணாமல் போன 12 வயது சிறுவனை கண்டுபிடித்த காவலரின் திறன்மிகு செயலை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர். பத்ரிநாராயணன் IPS அவர்கள்




கோவை மாவட்டம், வடவள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்  12  வயது   சிறுவன் செல்போனில் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் கடந்த (13.04.2022)ம் தேதி மாலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் வெகுநேரமாகியும் வராததால் அக்கம்பக்கம் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் வடவள்ளி காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் கொடுத்துள்ளார்கள். இப்புகாரின் அடிப்படையில் துரிதமாக செயல்பட்டு மதுரையில் இருந்த சிறுவனை மீட்ட  மு.நி.காவலர் திரு. கோட்டை சேகர்(GrI 1186) என்பவரின் திறன்மிகு செயலை   பாராட்டும் விதமாக,கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரி நாராயணன் IPS அவர்கள் (26.04.2022) மாவட்டக் காவல் அலுவலகத்தில்நேரில்அழைத்து  பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.


 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் இச்செயல் மற்ற காவலர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.

நிருபர்.P.நடராஜ்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.