கொடைக்கானலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளா மாநில சுற்றுலா பயணியின் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்ற 3 இளைஞர்களை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்

 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கடந்த மாதம் 28ஆம் தேதி கேரளா,ஆலப்புழா மாநிலத்தில் இருந்து 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில்  சுற்றுலா வந்துள்ளனர்,மேலும் இந்த இளைஞர்கள் கொடைக்கானல் அண்ணாசாலை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் வாடகைக்கு அறை எடுத்து தனது விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை (பல்சர் 220) சாலையின் ஓரத்தில்  நிறுத்தி விட்டு தனது அறைக்கு சென்றுள்ளனர்,மறு நாள்(29.03.2022) காலையில்  சாலையில் நிறுத்தப்பட்டிருந்த தனது இருசக்கர வாகனத்தை வந்து பார்க்கும் போது மாயமாக இருந்துள்ளது இதனையடுத்து கேரளா சுற்றுலா பயணிகள்  கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் ,புகார் அடிப்படையில் உதவிஆய்வாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து திருடர்களை தேடி வந்தனர்,இதனையடுத்து  ஆனந்தகிரி 4வது தெரு பகுதியில் நேற்று காவல் துறையினர் ரோந்து பணியில்  ஈடுபட்டிருந்தனர்,அப்போது அப்பகுதியில் சந்தேகம் அளிக்கும் வகையில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை நோட்டம் மிட்டு இருந்த இளைஞர்களை காவல் துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர் அப்போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்,இதனை தொடர்ந்து 3 இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து காவல் துறையினர் சிசிடிவி காட்சிகள்  அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போது  கடந்த மாதம் கேரளா சுற்றுலா பயணியின் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை  திருடியது தெரியவந்ததையடுத்து  விழுப்புரத்தை சேர்ந்த ஹாரிஸ் ராஜா(21),தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த ஆரிஸ் முகமது(19),அசாருதீன்(19) உள்ளிட்ட மூன்று இளைஞர்களையும் காவல் துறையினர் கைது செய்தனர்,மேலும்  கேரளா சுற்றுலா பயணியிடம் திருடப்பட்ட  விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்,மேலும் இந்த மூன்று இளைஞர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் போல் உலா வந்து முக்கிய நகர்ப்பகுதிகளை நோட்டமிட்டு விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களையும் திருடியது  விசாரணையில் தெரியவந்தது.





கொடைக்கானல் அண்ணாசாலை பகுதியில் காவல் நிலையம் இயங்கி வரும் நிலையில்,காவல் நிலையம் அருகினிலேயே  இருசக்கர வாகனம் திருடுபோனது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது,இதனை காவல் துறையினர் கவனம் செலுத்தி கொடைக்கானல்  நகர் பகுதிகள் மற்றும் சுற்றுலா தலங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கவேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.புகாரின்பேரில் உடனடி நடவடிக்கை மேற்க்கொண்டு இருசக்கரவாகனங்களை ககண்டுபிடித்த காவவல்குழுவினனருக்கு சுற்றுலா பயணிகள் மமற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர் நிருபர்.R.குப்புசாமி.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.