கொலைக் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தந்த செங்கோட்டை காவல்துறையினருக்கு காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் பாராட்டு.


தென்காசி மாவட்டம், செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  கலங்காதகண்டி பகுதியை‌  சேர்ந்த கனகராஜ் என்பவரை அதே பகுதியை சேர்ந்த துரை மற்றும் அவரது தந்தை ராஜ் இருவரும் கொலை செய்தனர். இவ்வழக்கில் சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  இருவருக்கும் ஆயுள் தண்டனை கிடைக்கப் பெறச் செய்த செங்கோட்டை காவல் ஆய்வாளர் திரு.ஷியாம் சுந்தர் அவர்கள் மற்றும்  நீதிமன்ற காவலர் திரு.முருகன் ஆகியோருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.பிவேஷ்குமார் IPS அவர்கள் தனது வாழ்த்துக்களை கூறி பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்.நிருபர்.அண்ணாமலை

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.