DRIVE AGAINST DRUGS - 2.O. 1005 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்.... பதுக்கி வைத்திருந்தவர் கைதுகோவை மாவட்ட காவல் துறையின் அதிரடி நடவடிக்கை".



தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் டாக்டர்.சைலேந்திரபாபு IPS அவர்கள் உத்தரவின் பேரிலும், மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் திரு.சுதாகர்,IPS அவர்கள் அறிவுறுத்தலின் பேரிலும், கோவை சரக காவல்துறை துணைத் தலைவர்  டாக்டர்.முத்துசாமி,IPS அவர்கள் வழிகாட்டுதலின் பேரிலும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன் IPS அவர்கள் மேற்பார்வையில்  (21.04.2022) கோவை மாவட்டம்    செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்  செட்டிபாளையம் காவல் நிலைய உதவிஆய்வாளர் திரு. சின்னகாமணன், சூலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ராஜேந்திர பிரசாத் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. செந்தில்குமார் மற்றும்  தனிப்படை குழுவினருடன் சம்பவ இடமான பெரிய குயிலி, வண்ணாங்காடு தோட்டம் பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டபோது புகையிலை பொருட்களை மறைத்து வைத்திருந்த கோவை மாவட்டம் பூ மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த மங்காராம் என்பவரது மகன் ரமேஷ்குமார் (27)என்பவரை கைது செய்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1005 கிலோ கிராம் எடையுள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து மேற்படி நபரை வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். 

 மேற்படி  இவ்வழக்கில் திறம்பட செயல்பட்டு குற்றவாளியை கைது செய்து 1005 கிலோ கிராம் எடையுள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த தனிப்படை காவல் துறையினரை உயரதிகாரிகள் வெகுவாக பாராட்டினார்கள்.

கோவை மாவட்ட காவல்துறையினரால் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் மீதான இந்த அதிரடி நடவடிக்கை தொடரும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்.*

இதுபோன்ற சட்டத்திற்கு விரோதமான செயலில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212, மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் இரகசியங்கள் பாதுகாக்கப்படும்.



நிருபர்.Pநடராஜ்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.