காஞ்சிபுரம் மாவட்டத்தில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 15 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் வட்டம், கச்சிப்பட்டு கிராமத்தை சார்ந்த தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் திரு.அருண்ஹால்டர் நிதியுதவி வழங்கினார். திருப்பெரும்புதூர் தனியார் உணவு விடுதியில் கடந்த வெள்ளிக்கிழமை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு, விஷவாயு தாக்கி, திருப்பெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட கச்சிப்பட்டு கிராமத்தை சார்ந்த திரு.ரங்கநாதன் (51), திரு.நவீன்குமார் (30), திரு.திருமலை (22) ஆகியோர் இறந்துவிட்டனர். அவர்களின் குடும்பத்திற்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திலிருந்து அதன் துணைத்தலைவர் திரு.அருண்ஹால்டர் அவர்கள் நிதியுதவி வழங்கினார். விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் பலியான உணவு விடுதியின் கழிவுநீர் தொட்டியை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் திரு.அருண்ஹால்டர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.இதையடுத்து விஷவாயு தாக்கி பலியான கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்த திரு.ரங்கநாதன், திரு.நவீன்குமார், திரு.திருமலை ஆகியோர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய தேசிய தாழ்த்தப