திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர ஆய்வு கூட்டத்தில், சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு SP பாராட்டு.


 திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர ஆய்வு கூட்டத்தில்,  சிறப்பாக பணிபுரிந்த  காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு SP பாராட்டு. மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன், IPS அவர்கள், தலைமையில்  அனைத்து உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது.  அப்போது சிறப்பாக பணிபுரிந்த 23 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை பாராட்டி SP வெகுமதி வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்ட ஊரக அனைத்து மகளிர் காவல்நிலைய போக்சோ  வழக்கு எதிரிக்கு 20 ஆண்டுகள்  சிறை தண்டனை பெற்றுக் கொடுத்த காவல் ஆய்வாளர்கள் திருமதி.நாககுமாரி,திருமதி.ராதா மற்றும் சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய இரண்டாம் நிலை காவலர் திருமதி. முத்துலெட்சுமி அவர்களுக்கும்

ஒரே மாதத்தில் 4 கொலை வழக்கு விசாரணையை குற்றவியல் நடுவர்  நீதிமன்றத்திலிருந்து, அமர்வு நீதிமன்ற விசாரணைக்கு எடுக்க சிறப்பாக பணிபுரிந்த நாங்குநேரி காவலர் திரு.தளவான், அவர்களுக்கும், மேற்படி காவலர் திரு.தளவான் அவர்கள்  விடுமுறையில் இருந்த போதிலும் விடுப்பை ரத்து செய்து சிறப்பாக பணியில் ஈடுபட்டார்

அடையாளம் தெரியாத வாகனம் விபத்து ஏற்படுத்தி சென்ற வழக்கில் வாகனம் மற்றும் அதன் ஓட்டுநரை  கண்டுபிடித்த இராதாபுரம் தலைமை காவலர்கள் திரு.ஸ்ரீபால், திரு.கதிரேசன் அவர்களுக்கும்

இயற்கையான முறையில் மரணமடைந்தாக கூறப்பட்ட வழக்கில் புலன்விசாரணை மேற்கொண்டு கொலை வழக்கு என  கண்டுபிடித்து எதிரியை கைது செய்த உவரி காவல் ஆய்வாளர் திருமதி.பிரேமா, அவர்கள், முதல் நிலை காவலர் திரு.இசக்கிமுத்து, இரண்டாம் நிலை காவலர்கள் திரு.கஷ்டர் ரோனால்டோ, திரு.இலக்கிய விக்னேஷ் அவர்களுக்கும்


அம்பை உட்கோட்டத்தில் கஞ்சா விற்பனை, இருசக்கர வாகன திருட்டு, காணாமல் போனவர்கள் வழக்கில் எதிரிகளை கண்டுபிடித்தற்காக திரு.ஆபிரகாம் ஜோசப், முதல் நிலை காவலர்கள் திரு.சேக் பரித், திரு.முகமதுபஷீர்,  இதேபோல் அம்பை உட்கோட்டத்தில்  தலைமை காவலர்கள் திரு.முகமது ரபிக், முதல்நிலை காவலர்‌ திரு.வேல்முருகன், திரு.பக்கிரி என்ற பாஸ்கர் ஆகியோருக்கும்,

வி.கே.புரம் காவல் சரகத்தில் 304 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த வழக்கில் உதவி ஆய்வாளர் திரு.முருகேஷ், முதல் நிலை காவலர்கள்  திரு.இசக்கிராஜா, திரு.கார்த்திக் பாபு ஆகியோருக்கும்,

குற்ற‌ வழக்கு உள்ள 64 எதிரிகளுக்கு நன்னடத்தை பிணை (Bind Over) பெற்றுக் கொடுத்ததற்காக முன்னீர்பள்ளம் காவல்நிலைய திரு. முருகப்பெருமாள் அவர்களுக்கும் 

சுத்தமல்லி கொலை வழக்கு எதிரிகளை CCTV கேமரா மூலம் எதிரிகளை கண்டுபிடித்து  சிறப்பாக பணிபுரிந்த    காவலர் திரு.சரவணன், அவர்களுக்கும்,*

காவல் நிலைய பதிவேடுகளை முறையாக பராமரித்து வந்ததற்காக திருக்குறுங்குடி காவல்நிலைய தலைமை காவலர் திரு.முத்துக்குமார் உட்பட 23 பேருக்கு வெகுமதி மற்றும் பரிசு வழங்கி ஊக்குவித்தார்.

மேற்படி ஆய்வு கூட்டத்தில்  கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜூ, துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

தலைமைநிருபர்.S.சண்முகநாதன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.