காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.
திருச்சி புனிதஜேம்ஸ்மெட்ரிக்குலேஷன் பள்ளிவளாகத்தில் காந்தி ஜெயந்தி விழாவினை முன்னிட்டு போலீஸ் பார்வை மாத இதழ்குழுமம்சார்பில்நடைப்பெற்றகாந்திஜெயந்திவிழாவில் தமிழ்நாடு ஏரோஸ்கட்டோபால் அசோசியேஷன், கோடக் மகேந்திரா பேங்க் குழுமும்இணைந்து பள்ளி மாணவர்களின் தமிழ் ஆற்றலை வளர்க்கச் செய்யும், நாட்டுப்பற்றை வளர்க்கும் விதமாக மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி நடைபெற்றது. போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்
காலை முதல் நடைபெற்ற இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றமாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. போலீஸ் பார்வை மாத இதழின் ஆசிரியர் டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் (வடக்கு)V.அன்பு,
திருச்சி மாநகர காவல் உதவி ஆணையர் திரு.அஜய்தங்கம் (கண்டோன்மென்ட் சரகம்), திருச்சி மாநகர போக்குவரத்து காவல் உதவி ஆணையர் திரு.ஜோசப்நிக்சன், திருச்சிமாவட்ட திருவெறும்பூர் சரக துணைகாவல்கண்காணிப்பாளர்(DSP) திரு.அறிவழகன்
திருச்சிமாநகரகால்குழந்தைகடத்தல்தடுப்புபிரிவு ஆய்வாளர் திருமதி.அஜீம், திருச்சிமாநகரகாவல் கன்டோன்மென்ட்போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ், திருச்சிமாநகரகாவல் எ.புதூர் காவல்ஆய்வாளர்திரு.பாலகிருஷ்ணன், ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி மாணவ மாணவிகளை பாராட்டி பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினர்.
மேலும் நிகழ்ச்சியில் போலீஸ்பார்வை கௌரவ ஆசிரியர் புலவர் தியாகசாந்தான், முதன்மை ஆசிரியர் K.T.சிவக்குமார், தலைமை நிருபர் I.சகாயராஜ்,தலைமைநிருபர். ராக்கேஷ் சுப்ரமணி, தலைமை நிருபர் வேல்முருகன்,சிறப்பு நிருபர் மு.பாண்டியராஜன், நிருபர்கள் G.சிவபிரகாசம்,S. மணிகண்டன், V.லட்சுமணன் ஆகியோர் நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர், மேலும் மாணவர்களின் பெற்றோர்கள், நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர் என்பதுகுறிப்பிடதக்கது.
SpecialReporter.M.Pandiyarajan.
Comments
Post a Comment