திருச்சிசமயபுரம் கோவிலில் அக்னி வெயிலில் வாடி வதங்கும் பக்தர்கள்.


சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் நிதி மூலம் ரூ.13.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் வரிசை வளாகம்  

காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் அவர்களால் 10-05-23 இன்று திறந்து வைத்துள்ள நிலையில், சமயபுரம் கோவிலில் பக்தர்களுக்கு தண்ணீர் வசதி கூட இல்லாமல் தவித்த நிலையில், அக்னி வெயிலில் வெந்து வாடும் நிலையில் உள்ளது. சமயபுரம் கோவிலில் பொது தரிசனம் அல்லாது பக்தர்கள் நூறு ரூபாய் கட்டணம் செலுத்தி அம்மனை தரிசனம் செய்வதற்கு  நீண்ட வரிசையில் மணிக்கணக்காக வெயிலில் நின்று தரிசனம் செய்ய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது, 

தற்காலிக நிழற்குடையாவது அமைத்திருக்கலாம் என்று பக்தர்கள் மனவருத்தத்துடன் சமயபுரம் மாரியம்மன் தரிசனம் செய்வதற்கு கேள்வி எழுப்பி செல்கின்றனர். சிலர் வெயிலில் வரிசையில் நிற்க முடியாமல் மயங்கி விழும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது, சிலர் தரிசனம் செய்யாமல் திரும்பிச் செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது, வாடி வதங்கும் பக்தர்கள் மீது கருணை இல்லாமல் நடந்து கொள்கிறதா கோவில் நிர்வாகம் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர், உடனடியாக கோவில் நிர்வாகம் இதனை சரி செய்து தர நடவடிக்கை எடுக்குமா என பக்தர்கள் பலரும் மனம் வருந்தி செல்கின்றனர்.

தலைமைநிருபர்.S.வேல்முருகன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.