சாலையில் நிர்வாணமாக சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்.ஆடை அணிவித்து ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்த பெண் தலைமை காவலர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் நிர்வாணமாக சென்றதைப் பார்த்த அங்கு பணியில் இருந்த நேசமணி நகர் காவல் நிலையைத்தை சேர்ந்த பெண்  தலைமை காவலர் திருமதி. சரஸ்வதி அவர்கள் உடனடியாக சென்று புடவையை போர்த்தி ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தார்.

 அவரது இந்த நற்செயலை பாராட்டும் வகையில்  22.03.2023  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. D. N.ஹரிகிரண் பிரசாத் IPS அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அந்த பெண் காவலரை நேரில் வரவழைத்து  அவரது சேவையை பாராட்டினார்.

REPORTER.JAYAVELMURUGAN.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.