திருநெல்வேலி‌ மாவட்ட காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம்.SP.சரவணன்IPS.தலைமை.


திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் உள்ள  தொழில் நிறுவனங்கள், கல்லூரி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப‌ நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் சைபர் கிரைம் குற்றங்களால் பாதிப்படையாமல் இருக்க அவர்களுக்கு சைபர் கிரைம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மற்றும் மாநகர காவல்துறை சார்பாக சைபர் கிரைம் கருத்தரங்கு கூட்டம்  பாளையங்கோட்டை  செல்வி மஹாலில் வைத்து நடைபெற்றது.

இக்கருத்தரங்கு  கூட்டம்  திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன், IPS அவர்கள்., தலைமையில்   நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி மாநகர துணை ஆணையர் திரு.சரவணகுமார், அவர்கள் கலந்து கொண்டார். இக்கருத்தரங்கு கூட்டத்தில் திருநெல்வேலி  மாவட்டத்தில் உள்ள

வங்கி, கல்லூரி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்  மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்கள்சார்ந்த வர்கள் பங்கு பெற்றனர்.

அப்போது பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், தொழில் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் பாதுகாக்க முக்கிய அறிவுரைகளை வழங்கினார். சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க  ( O (Opportunity) O (Offender) O (Object)) இந்த மூன்றையும் அறிந்து கொண்டு சைபர் குற்றங்கள் நடவமால் தடுக்க முடியும் என அறிவுரைகளை வழங்கினார். 

பின்னர் சென்னை தனியார் தகவல்  தொழில்நுட்ப இயக்குநர்கள் திரு.பொன்மாகிஷான், திரு.லெட்சுமி பாலாஜி ஆகியோர் சைபர் கிரைம் பாதுகாப்பு நடவடிக்கை குறித்தும், தற்போது நடக்கும் சைபர் கிரைம் குறித்தும் அதிலிருந்து  பாதுகாக்கும் வழிமுறைகளை கூறி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தானார்கள்

இந்நிகழ்சியில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜு, மாவட்ட சைபர் கிரைம் ஆய்வாளர் திருமதி.ரமா,மாநகர  சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திருமதி.பிரவினா, உதவி ஆய்வாளர்கள் திரு.ராஜரத்தினம், திரு.மோகன் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

இணைஆசிரியர்.மதனகோபால்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.