சோழன் புக்உலகசாதனையாளர்கள் அமைப்பின்சார்பாக மாணவமாணவிகளுக்கு விளையாட்டுபோட்டி வெற்றியாளர்களுக்குபரிசுகள்வழங்கிய DSP.அறிவழகன்.
திருச்சிமாவட்டம் 5/3/2023 ஞாயிற்றுக்கிழமை பாரத மிகுமின் வளாகத்தில் உள்ள பாய்லர் பிளாண்ட் தமிழ் வழி கல்வி பயிலும் பள்ளியில்
சோழன் வேல்டு புக் ஆஃப் ரெக்கார்டு மற்றும் பதஞ்சலி ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்துபாரத மிகுமின் ஊழியர்களின் குழந்தைகளுக்கான ஓட்டப் பந்தயப் போட்டி மிக விமர்சையாக நடத்தினர் . சோழன் வேல்டு புக் ஆஃ ப்ரெக்கார்டு நிறுவனர் திரு. நிமலன் நீலமேகம் மற்றும் திருச்சி மாவட்ட தலைவர் திரு. செல்வராஜ் இப்போட்டியினை மிகச் சிறப்பாக நடத்தினர் .
இப்போட்டியில் 300க்கும் அதிகமான வீரர்கள் வீராங்கனைகள் பங்குகொண்டு சாதனை படைத்துள்ளனர் . திருவெரம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. அறிவழகன் சிறப்பு விருந்தினர் ஆகவும் தமிழ்நாடு எரோஸ் கேட்டோபால்சங்கத் தலைவர் திரு. ராக்கேஷ் சுப்பிரமணியன் கௌரவ விருந்தினராக இவ்விழாவில் பங்குகொண்டு வெற்றி பெற்ற வீரர்கள் வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கி , வருகை தந்திருக்கும் அனைவரிடமும் விழிப்புணர்வு உரையாற்றி இந்நிகழ்ச்சியினை சிறப்பித்தனர் .
நிருபர்.திவாகர்.
Comments
Post a Comment