தேனி மாவட்டகாவல்துறையினரின் சீர்மிகு பணியை பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கிய தமிழ்நாடு காவல்துறை DGP. அவர்கள்

 


தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் / படைத்தலைவர்                         DGP Dr.C. சைலேந்திரபாபு,IPS., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தேனி மாவட்டத்தில் கடத்தல், கஞ்சா, திருட்டு மற்றும் சைபர்கிரைம் குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு  விரைந்து குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய தேனி மாவட்ட காவல்துறையினரின்  சீர்மிகு பணியை பாராட்டி திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் நற்சான்றிதழ், பண வெகுமதி வழங்கி, மேலும் சிறப்பாக பணி தொடர தனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

   இதனைத்தொடர்ந்து திருட்டு வழக்கில் மீட்க்கப்பட்ட பொருட்களை உரியவரிடம் வழங்கினார்.

இந்நிகழ்வில் தென் மண்டல காவல்துறை தலைவர் IG. திரு.அஸ்ராகார்க்,IPS, அவர்கள், திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர் Dr..அபிநவ்குமார்,IPS அவர்கள்,  தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,IPS அவர்கள்,திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் உடன் இருந்தனர்.

REPORTER.PARAMASIVAM.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.