விழுப்புரம் மாவட்ட காவல்துறைசார்பாக வடமாநில தொழிலாளர்களுக்குபாதுகாப்பு வழிப்புணர் முகாம்நிகழ்ச்சி.
காவல்துறை தலைமை இயக்குனர் DGP.Dr.C. சைலேந்திரபாபு IPS., அவர்களின் ஆணைக்கிணங்கவடக்கு மண்டல காவல்துறை தலைவர் IG.Dr. கண்ணன் IPS., அவர்களின் உத்தரவின் பேரில்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் SP. Dr. ஸ்ரீநாதா IPS., அவர்களின் அறிவுறுத்துதலின்பேரில்
விழுப்புரம்மாவட்டத்தில் பணிபுரியும் வட இந்திய தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு விழுப்புரம் மாவட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களை நேரில் சந்தித்து சமூக வலைதளங்களில் பரவும் போலியான காணொளிகளை நம்பி எவ்வித அச்சுறுத்துதலுக்கும் பயப்பட வேண்டாம் எனவும். தங்கள் பாதுகாப்புக்கு நாங்கள் இருக்கிறோம் என உறுதி அளித்தும் ஏதேனும் இடர்கள் ஏற்பட்டால் உடனடியாக காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ள காவல் நிலைய எண்களை கொடுத்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.
தொலை பேசி எண்: 94981-00485காவல் கட்டுபாட்டு அறை எண்: 94981-81229 / 100.
நிருபர்.ராமநாதன்.
Comments
Post a Comment