சென்னை ஆவடி மாநகராட்சி திருமுல்லைவாயிலில் செல்போன் திருடர்கள் கைதுதிருமுல்லைவாயில் T10 காவல்துறையினர் அதிரடி.

 

சென்னை ஆவடி திருமுல்லைவாயில் T 10 காவல்நிலையத்திற்குட்ப்ட்ட திருமுல்லைவாயில் அம்பத்துர், மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாலையில் நடந்து செல்வோர் மற்றும்  ஆள்நடமாட்டம். இல்லாத பகுதிகளில் அதிகளவில் செல்போன்களை பறித்து விட்டு அதிரடியாக இருசக்கர வாகனம் மூலம்  தப்பித்து விடுவதாக  புகார்கள் வந்தவண்ணம் இருந்தது. இதனை தொடர்ந்து காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிந்து  அவர்களின் உத்தரவின் படி 






காவல் ஆய்வாளர் குற்றப்பிரிவு திரு.கிருஷ்ணகுமார்மற்றும் தலைமைக் காவலர் சார்லஸ்   அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மேற்படி குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தபட்டு விசாரணைகள் மேற்கொண்டதில்   அஜுத் என்கிற அஐய் வயது  26, S/o, கிருஷ்ணா அம்பத்துர் மற்றும்  சந்தோஷ்குமார் வயது 19, S/o, சரவணன் அம்பத்துர் ஆகிய இரு  குற்றவாளிகள் அம்பத்தூரில்  அதிரடி யாக கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து உரியவிசாரணைகள் செய்ததில்  குற்றவாளிகள் தங்களது குற்றத்தை ஒத்து கொண்டனர் மேலும் மேற்படி குற்றவாளிகளிடமிருந்து   18-செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் T10 திருமுல்லைவாயில் காவல் துறையினர் தெரிவித்தனர்.

 


மேற்படி இரண்டு குற்றவாளிகள் மீது சென்னையில் பல காவல் நிலையத்தில் வழக்குகள் பதிந்து சிறை சென்றார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

மேற்படி குற்றவாளிகள்  இருவரையும் கடந்த 8/2/23 தேதி T10 PS Cr.No.53/23 u/s 341, 294(b), 323, 336, 427, 392, 397, 506(ii) IPC வழக்கில் கைது செய்து அம்பத்தூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டதால்  திருமுல்லைவாயில் பகுதி மட்டுமல்லாது  ஆவடி  மாநகராட்சி  எல்லைக்குட்பட்ட அனைத்து மக்களும் நிம்மதியடைந்தனர்  என்பதும்குறிப்பிடதக்கது  

மேற்படி இரண்டு குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்த திருமுல்லைவாயில் T10த காவல் நிலைய காவல்  ஆய்வாளர் திரு.கிருஷ்ணகுமார்  மற்றும் காவல் குழுவினர் அனைவருக்கும் போலீஸ் பார்வை மாத இதழின் சார்பாக மக்களின் காவல் பணி சிறக்க வளர வாழ்த்துக்களையும் பாராட்டுதலழ்களையும் தது த்துக்கொளகிறோம்.


முதன்மை ஆசிரியர் மரு.கண்ணன் சென்னை.



Comments

Popular posts from this blog

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

சாலையில் நிர்வாணமாக சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்.ஆடை அணிவித்து ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்த பெண் தலைமை காவலர்.

தூத்துக்குடி மாவட்டகாவல்துறைசார்பாகபொதுமக்களுக்கு மாற்றத்தைதேடி சமூகவிழிப்புணர்வுநிகழ்ச்சி.