தர்மபுரி வக்கீல் சிவகுமார் கொலையில் கொலையாளிகளை நெருங்கி விட்டோம் மாவட்டSP.சரோஜ்குமார்தாக்கூர் IPS தகவல்.

 

கிருஷ்ணகிரி மாவட்ட SP. சரோஜ்குமார் தாக்கூர் IPS நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

கிருஷ்ணகிரியில் 10 பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படையினர் கள்ளச்சந்தை மது விற்பனை, புகையிலை பொருட்கள் கடத்தலை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தர்மபுரி வக்கீல் சிவக்குமார் கொலையில் கொலையாளிகளை நெருங்கி விட்டோம். 2 நாட்களில் முழு விவரம் தரப்படும். ஓசூர் அடுத்த எலுவப்பள்ளி கிராமத்தில் அசோக்குமார் என்பவருக்கு சொந்தமான, 2 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயன்ற தும்மனப்பள்ளி ஜெகதீஷ், ஆவலப்பள்ளி சம்பங்கிராம ரெட்டி இருவரும் கைது செய்யப்பட்டனர். 

அதேபோல கட்டப்பஞ்சாயத்து குறித்து புகார்கள் வந்துள்ளன. அவற்றை விசாரித்து அதிலும் கைது நடவடிக்கை தொடரும். ஓசூர், கிருஷ்ணகிரியில் இதுகுறித்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அதில், கட்டப்பஞ்சாயத்து, நிலப்பிரச்சினை, ஆட்டோ பைனான்ஸ் பிரச்சனை குறித்து மக்கள் தாராளமாக புகார் அளிக்கலாம் கண்டிப்பாக குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவர். கடந்த 2 வாரத்தில், தனிப்படை போலீசார் சோதனையில் 1,460 கிலோ புகையிலை பொருட்கள், 2,400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2 லாரிகள், 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

நிருபர்.முகமதுயூனுஸ்

Comments

Popular posts from this blog

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

சாலையில் நிர்வாணமாக சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்.ஆடை அணிவித்து ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்த பெண் தலைமை காவலர்.

தூத்துக்குடி மாவட்டகாவல்துறைசார்பாகபொதுமக்களுக்கு மாற்றத்தைதேடி சமூகவிழிப்புணர்வுநிகழ்ச்சி.