இந்தியகாவல்துறை துப்பாக்கிசுடும் போட்டியை துவக்கிவைத்து வெற்றிபெற்றவர்களுக்கு பதக்கம்வழங்கி DGP.Dr.C.சைலேந்திரபாபு IPS.பாராட்டு.
23-வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டியை சென்னை வண்டலூரில் உள்ள காவல் உயர் பயிற்சியக கவாத்து மைதானத்தில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் DGP.Dr.C. சைலேந்திரபாபு, IPS அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
போட்டியின் முதல் நாள் 25 கஜம் ஆண்கள் கைத்துப்பாக்கி சுடும் போட்டியில் அசாம் ரைபில்ஸ் வீரர் திரு.கணேஷ் குமார் முதல் இடத்தையும் தமிழ்நாடு காவல்துறை காவலர் திரு. சதி சிவனேஷ் மூன்றாவது இடத்தையும், 15 கஜம் ஆண்கள் கைத்துப்பாக்கி சுடும் போட்டியில் அசாம் ரைபில்ஸ் வீரர் திரு. இம்னோக் யான்சு முதல் இடத்தையும், 100 மீட்டர் ரைபிள் சுடும் பிரிவில் அசாம் காவல் துறை அவில்தார் திரு. அபூர்வா தபில்தார் முதல் இடத்தை பெற்றார்.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்DGP.Dr.C.சைலேந்திரபாபு IPS பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்.முதன்மைஆசிரியர் S.முருகானந்தம்.
Comments
Post a Comment