கோவை மாவட்டம் காரமடை பகுதியில் 1100 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள் பறிமுதல்... விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தவர் கைது காவல்துறையினர் அதிரடி.

 

இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கும் போதைப்பொருட்களின் நடமாட்டத்தையும் பயன்பாட்டையும் முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன்,IPSஅவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். 

அதன் அடிப்படையில்  காரமடை பகுதியில் போதைப்   பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேட்டுப்பாளையம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பாலாஜி அவர்கள் தலைமையில்  காரமடை  காவல்துறையினர் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த சம்பவ இடமான பாலாஜி நகர்க்கு விரைந்து சென்று மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஷேக் சாவூத்  என்பவரது மகன் காஜா மொய்தீன்(48) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார்  ரூ.6,50,000 /- மதிப்புள்ள 1100 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள் ,  நான்கு சக்கர வாகனம்-1 மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் - 2 ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

போதைப் பொருட்கள் இளைஞர்களின் சிந்தனையை அழித்து அவர்களின் வளர்ச்சியை தடுத்து விடுகிறது. இதனை கருத்தில் கொண்டு போதை பொருள் விற்பனையாளர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

இதுபோன்ற போதைப்பொருள் விற்பனையாளர்கள் பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.என்று கோவைமாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

நிருபர்.P.நடராஜ்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.