தூத்துக்குடிமாவட்டத்தில் போதைபொருள் கடத்தல் மற்றும் விற்பனையை ஒழிக்க SP.Dr.L.பாலாஜிசரவணன் தீவிரநடவடிக்கை


 தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.L. பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில்  ரோந்தை தொடர்ந்து  நேரடியாக தீவிர ரோந்து.

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா புகையிலை போன்ற போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சிறப்பு ரோந்து மேற்கொள்ளுமாறு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய அதிகாரிகளுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. L. பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி  (14.12.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீன்பிடி துறைமுகம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை குறித்து சிறப்பு ரோந்து மேற்கொண்டார். அதனைதொடர்ந்து  (15.12.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.L.பாலாஜி சரவணன் அவர்கள் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹவுசிங்போர்டு உட்பட பல பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று அப்பகுதி மக்களிடம் கஞ்சா போன்ற போதைப்பொருள் விற்பனை தடுப்பு குறித்து கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

 மேலும் போதை பொருள் விற்பனை மற்றும் கடத்தல் தடுப்பது குறித்து பொதுமக்கள் தகவல் தருவதற்காக தூத்துக்குடி மாவட்ட காவல்துறையால் அறிமுகபடுத்தப்பட்டுள்ள 83000 14567 என்ற செல்போன் எண் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்த சிறப்பு ரோந்தின்போது சிப்காட் காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் திரு. கலைவாணர், தாளமுத்துநகர் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலர் திரு. முருகேசன் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.

நிருபர்.அய்யப்பன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.