சேலம்மாநகரகாவல்துறைசார்பாக பொதுமக்கள் மற்றும் ஆட்டோஓட்டுனர்களுக்கு போதைபொருள் தீமைகுறித்து விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி
. 14.12.2022-ஆம் தேதி, சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.நஜ்முல் ஹோதா, I.P.S., அவர்களின் தலைமையில் பள்ளப்பட்டி காவல் நிலைய சரகத்தில், P.V.மஹாலில்,பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கான "போதைப் பழத்திற்கு எதிரான உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம்" நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர்கள், தலைமையகம் DC. திரு.S.ராதாகிருஷ்ணன் அவர்களும், தெற்கு DC திருமதி.S.P. லாவண்யா அவர்களும், வடக்கு DC. திரு.M.மாடசாமி அவர்களும், காவல்துறை உயர் அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இக்கருத்தரங்கில் புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் போதை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்ப்போம்!
உயிரை காப்போம், குடும்பத்தை நேசிப்போம்!! என்ற உறுதி மொழியை மாநகர காவல் ஆணையாளர் திரு.நஜ்முல் ஹோதா IPS அவர்களால் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.
சிறப்புநிருபர்.ஆசிப்முகமது.
Comments
Post a Comment