தூத்துக்குடி கோவில்பட்டி மேற்கு, எட்டையாபுரம், எப்போதும்வென்றான் மற்றும் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.L.பாலாஜி சரவணன் ஆய்வு.


மேற்படி காவல் நிலையங்களில்  முக்கிய வழக்கு கோப்புகளையும், நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.. L. பாலாஜி சரவணன் அவர்கள்   ஆய்வு செய்தார்.


மேலும் இந்த ஆய்வில் கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்பவர்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது  நடவடிக்கை எடுக்கவும், காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், காவல் நிலைய நடவடிக்கைகள் அனைத்தும் சட்டத்திற்குட்பட்டு இருக்கவேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார்.


இந்த ஆய்வின்போது விளாத்திகுளம் காவல் உதவி கண்காணிப்பாளர் திருமதி. ஸ்ரேயா குப்தா IPS கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ்,  கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. கிங்ஸ்லி தேவ் ஆனந்த், எட்டையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஜின்னா பீர்முகமது, கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. பத்மாவதி மற்றும் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.

நிருபர்.V.முருகேசன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.