காணாமல் போன 6 மாத குழந்தையை 3 மணி நேரத்தில் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த தமிழ்நாடுஓசூர் காவல்துறை SP. DGPபாராட்டு


 உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பேரிகை செல்ல வேண்டி 30.10.2022 -ம் தேதி காலை 04.00 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகர பேருந்து நிலையத்தில் உறங்கிக் கொண்டிருந்தபோது ராம்கேவால்-அனிதா தம்பதியரின் 6 மாத பெண் குழந்தையை அடையாளம் தெரியாத நபர் கடத்திச் சென்று விட்டதாக ஓசூர் நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி மாவட்டகாவல் கண்காணிப்பாளர் திரு. சரோஜ்குமார் தாகூர், IPS அவர்கள் உத்தரவின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்தில் இருந்த கேமராக்களை ஆய்வு செய்து குழந்தையை கடத்திச் சென்ற 3 மணி நேரத்தில் குழந்தையை கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 

மேலும் குழந்தையை கடத்திச் சென்ற நபரை  காவல்துறையினர் கைது செய்து வழக்குபதிவுசெய்து சிறையில் அடைத்தனர். துரிதமாக செயல்பட்டு குழந்தையை மீட்ட காவல்துறையினரை SP.சரோஜ்குமார் தாகூர், IPS,  தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்    DGP.Dr.C.சைலேந்திர பாபு, IPS அவர்கள் மனதார பாராட்டினார்கள்.

நிருபர்.முகமதுயூனுஸ்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.