ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 21 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.25,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.


                                                                       SP.V.பாஸ்கரன்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015- ம் ஆண்டு இடையகோட்டை புதூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (45) என்பவர் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை  செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரை தொடர்ந்து ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் முருகேசன் என்பவரை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

                                                     

                                                                         குற்றவாளி

இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.திலகா அவர்கள் நீதிமன்ற தலைமைக் காவலர் திருமதி.கார்த்திகை வேணி அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் திருமதி.ஜோதி அவர்களின் சீரிய முயற்சியால்  28.10.2022-ம் தேதி திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி முருகேசன் என்பவருக்கு 21, வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.25,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.

நிருபர்.R.குப்புசாமி

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.