வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் பதிவு செய்வது கட்டாயம் - திருச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி
திருவாரூர் மாவட்டம், லட்சுமாங்குடியைச் சார்ந்த முத்துக்குமரன் என்பவர், குவைத் நாட்டில் பணிபுரியும் இடத்தில் இறந்தார். அவரது உடல் தமிழக அரசின் முயற்சியால் மீட்கப்பட்டு, விமானத்தின் வாயிலாக, திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்IAS ஆகியோர் மலர் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களிடம் கூறுகையில்.... வேலை நிமித்தமாக முத்துக்குமரன் சென்று அங்கு உயிரிழந்து இருப்பது எங்களுக்கு வேதனை அளிக்கிறது. அயலக தமிழர்களுக்கான துறை இருக்கிறது. அங்கு வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் முறைப்படி பதிவு செய்துவிட்டு செல்ல வேண்டும். அதற்காகத்தான் இந்த துறையை உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதை பற்றி விழிப்புணர்வு வேண்டும்.
வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் முறையாக பதிவு செய்துவிட்டு செல்வது மிக முக்கியமான ஒன்று இது குறித்த விழிப்புணர்வு நமக்கு கட்டாயம் தேவை என தெரிவித்தார்.
ChiefReporter.N.RAKESHSUBRAMANI.
Comments
Post a Comment