மதுரைமாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வுஏற்படுத்திவவரும் காவல்துறையினர்
. மதுரை மாவட்டத்தில் பேரையூர் உட்கோட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவபிரசாத் IPS அவர்கள் உத்தரவின் பேரில், பேரையூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் செல்வி. இலக்கியா அவர்கள் மேற்பார்வையில், காவல்துறையினர் டி.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவ, மாணவிகளுக்கு போதைப்பொருள் உபயோகத்தினால் ஏற்படும் பின் விளைவுகளை குறித்து காவல்துறையின் சார்பாக விழிப்புணர்வு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு போதை பொருட்கள் குறித்த, பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு டி. கல்லுப்பட்டி காவல் நிலைய, காவல் ஆய்வாளர் திரு. பத்மநாபன் அவர்கள், பரிசுகள் வழங்கி மாணவர்களை பாராட்டினார்கள். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிருபர்.J.பீமராஜ்.
Comments
Post a Comment