காவல்ரோந்து பணியின் போது சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 நபர்களை கைது செய்த பயிற்சி உதவி ஆய்வாளருக்கு வெகுமதி மற்றும் பரிசு வழங்கி SP.பாராட்டு.



தமிழக காவல்துறை பயிற்சி  அகாடமியில் பயிற்சி முடித்த  உதவி ஆய்வாளர்களுக்கு  மாவட்ட காவல் நிலையங்களில் ஆறு மாதம் அடிப்படை பயிற்சி பெற உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்பேரில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு 16 பயிற்சி உதவி  ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டு காவல் நிலையங்களில் பயிற்சி பெற்று வருகின்றனர்.  

மேற்படி திசையன்விளை காவல் நிலையத்தில் பயிற்சி உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் திரு.ஆதிராஜன், அவர்கள்,  கடந்த 28.09.2022 அன்று திசையன்விளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்களை கைது செய்தார். இதனை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  திரு.P.சரவணன், IPS அவர்கள், பயிற்சியின் போது சிறப்பாக பணிபுரிந்த உதவி ஆய்வாளர் *திரு.ஆதிராஜன், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் நேரில் அழைத்து வெகுமதி மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார். மேலும் தொடர்ந்து சிறப்பாக பணிபுரிய வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தலைமைநிருபர்.S.சண்முகநாதன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

திருநெல்வேலி‌ மாவட்ட காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம்.SP.சரவணன்IPS.தலைமை.