கோவை மாவட்டம்துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 100 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்... விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தவர் கைது.

 

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன், IPS அவர்கள் உத்தரவின் பேரில் அரசால்தடை செய்யப்பட்ட மற்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய புகையிலை பொருட்களை சட்டத்திற்கு விரோதமாக விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறையினர்கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

 அதன் அடிப்படையில்  துடியலூர் காவல் நிலைய  உதவி ஆய்வாளர் திரு. ராஜா அவர்களுக்கு புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் துடியலூர் ராஜன் காலனி, TVS நகர் பகுதிக்கு  காவல்துறையினர் விரைந்து சென்று சோதனை மேற்கொண்டபோது புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த  சீரா நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சம்பா மூர்த்தி என்பவரது மகன் விஷ்ணுகுமார் (48) என்பவரை  கைது செய்து அவரிடமிருந்து  சுமார் 100 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க தயங்காமல் அழைத்திடுங்கள் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

நிருபர்.P.நடராஜ்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.