கோவை மாவட்டம் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் விருதினைப் பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் IPS அவர்கள்.
தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் வெள்ளி விழா (06.08.2022) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் மனித உரிமைகளை மேம்படுத்துதல், பாதுகாத்தல், மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்ப்பது போன்றவற்றிற்காக மாநில மனித உரிமைகள் ஆணையம் சிறந்த முறையில் பணியாற்றிய மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் அதிகாரிகளை தேர்வு செய்தது. இதில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தால் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன், IPS அவர்கள் சிறந்த காவல்அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டு, அவ்விருதினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு வழங்கினார்கள்.என்பது குறிப்பிடதக்கது.
Reporter.P.Nataraj.
Comments
Post a Comment