கோவை மாவட்டம்தொடர்ந்து நான்காவது மாதமாக களவு போன செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன் IPSஅவர்கள் (29.08.2022) ஆகஸ்ட் மாதத்தில் மாவட்டத்தில் காணாமல் மற்றும் களவு போன ரூ.16,50,000/- மதிப்புள்ள சுமார் 110 செல்போன்களை சைபர் க்ரைம் காவல்துறையினர் மூலம் கண்டுபிடித்து, அதன் உரிமையாளர்களை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்தார்.
கடந்த நான்கு மாதத்தில் மட்டும் கோவை மாவட்டத்தில் ரூபாய் 67,65, 000/-* மதிப்புள்ள சுமார் 451 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று வரும் காலங்களில் காணாமல் போன செல்போன்கள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன் IPS அவர்கள் உறுதியளித்துள்ளார்.
நிருபர்.P.நடராஜ்.
Comments
Post a Comment