கோவை மாவட்டம்தொடர்ந்து நான்காவது மாதமாக களவு போன செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்.


கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன் IPSஅவர்கள்  (29.08.2022) ஆகஸ்ட் மாதத்தில் மாவட்டத்தில் காணாமல் மற்றும் களவு போன ரூ.16,50,000/- மதிப்புள்ள சுமார் 110 செல்போன்களை சைபர் க்ரைம் காவல்துறையினர் மூலம் கண்டுபிடித்து, அதன் உரிமையாளர்களை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்தார். 

கடந்த  நான்கு மாதத்தில் மட்டும் கோவை மாவட்டத்தில் ரூபாய் 67,65, 000/-* மதிப்புள்ள சுமார் 451 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இதேபோன்று வரும் காலங்களில் காணாமல் போன செல்போன்கள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன் IPS அவர்கள் உறுதியளித்துள்ளார்.

நிருபர்.P.நடராஜ்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.