வாணியம்பாடி காவல் சர்கத்திற்குட்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காண பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.

 

 திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி காவல் சர்கத்திற்குட்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காண பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு விநாயகர் சதுர்த்தி விழாவினை எந்த ஒரு அசம்பாவித சம்பவங்களும், சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் ஏற்படாமல் சிறப்பான பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.

கூட்டத்தில் வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன், காவல் ஆய்வாளர்கள் பழனி, நாகராஜ், அருண்குமார், செல்லபாண்டியன், ஜெயலட்சுமி, தமிழரசி, சாந்தி,

மற்றும் வாணியம்பாடி காவல் சரக்கத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

நிருபர்.முகமதுயூனுஸ்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.