கடலூர்மாவட்டகாவல்துறையினர் பொதுமக்களுக்கு போதைபொருட்கள் உபயோகத்தினால் ஏற்ப்படும் தீங்கு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிநடத்தினர்.
கடலூர் மாவட்டம்காவல் கண்காணிப்பாளர் திரு . S. சக்திக ணேசன் IPS அவர்கள் கடலூர் மாவட்டத்தில் கஞ்சா , குட்கா போன்ற போதைப் பொருட்கள் முற்றிலும் தடுக்கும் பொருட்டு உட்கோட்ட காவல் அதிகாரிகள் , காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தங்களது காவல் சரகத்திற்கு உட்பட்ட முக்கிய இடங்களில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வழங்கிய அறிவுரையின்பேரில்
கடலூர் மாவட்டத்தில் திருப்பாதிரிபுலியூர் , புதுப்பேட்டை , சிதம்பரம் , பரங்கிப்பேட்டை , புவனகிரி , கிள்ளை , வடலூர் , விருத்தாச்சலம் , கம்மாபுரம் , பெண்ணாடம் , திட்டக்குடி , மந்தாரக்குப்பம் , ஸ்ரீமுஷ்ணம் ஆகிய காவல் நிலைய சரகங்களில் காவல் அதிகாரிகள் போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம்களில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் . கஞ்சா , குட்கா போன்ற போதை பொருட்களால் உடல்நலம் பாதிக்கபடுவதோடு , பொருளாதாரம் பாதிக்கப்பட்டு வாழ்வில் முன்னேற்றம் தடைப்படும் என விழிப்புணர்வு ஏற்படுத்தியும் , கஞ்சா , குட்கா போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை பற்றி பொதுமக்கள் தயக்கமின்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் .
சிறப்பு நிருபர்.P.முத்துகுமரன்.
Comments
Post a Comment