தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கூட்டுக்கொள்ளை மற்றும் நில மோசடி வழக்குகளில் சம்பந்தப்பட்ட 5 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது


தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கூட்டுக்கொள்ளை மற்றும் நில மோசடி வழக்குகளில் சம்பந்தப்பட்ட 5 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது  -  இந்த ஆண்டு இதுவரை 179 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.L.பாலாஜி சரவணன் அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் Dr. K. செந்தில் ராஜ் IAS அவர்கள் நடவடிக்கை.

கடந்த 28.07.2022 அன்று புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமாரகிரி வி.ஓ.சி நகர் பகுதியில் தூத்துக்குடி சாயர்புரம் பகுதியை சேர்ந்த தாமஸ் மகன் சிம்சன் (75) என்பவரை சொத்துப்பிரச்சினை காரணமாக இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த வழக்கில் புதுக்கோட்டை, சூசைபாண்டியாபுரம் வெற்றிவேல் நகர் பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகன் முருகன் (எ) ஸ்டீபன் (40) என்பவரை புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரியான  முருகன் (எ) ஸ்டீபன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. வின்சென்ட் அன்பரசி அவர்களும்,

கடந்த 29.07.2022 அன்று தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆயுதங்களுடன் கூட்டுக்கொள்ளையில் ஈடுபட முயற்சித்த வழக்கில் தூத்துக்குடி சுந்தரவேல்புரம் பகுதியை சேர்ந்த மதியழகன் மகன் முத்துசெல்வம் (22),  தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் மதன்ராஜ் (21) மற்றும் தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி பகுதியை சேர்ந்த தங்கமாரி மகன் லெட்சுமணன் (20) ஆகியோரை வடபாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரிகளான முத்துசெல்வம், மதன்ராஜ் மற்றும் லெட்சுமணன் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ரபி சுஜின் ஜோஸ் அவர்களும்,

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த மைக்கேல் தனசாமி மகன் தீபக் தயாளன் (44) என்பவர் போலி ஆவணங்கள் மூலம் நில மோசடி செய்த வழக்கில் தூத்துக்குடி மாவட்ட குற்ற பிரிவு போலீசார் மேற்படி எதிரி தீபக் தயாளனை கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரியான தீபக் தயாளன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மாவட்ட குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. அந்தோணியம்மாள் அவர்களும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.

மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.L.பாலாஜி சரவணன் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் Dr. K. செந்தில்ராஜ் IAS அவர்கள் புதுக்கோட்டை, சூசைபாண்டியாபுரம் வெற்றிவேல் நகர் பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகன் 1) முருகன் (எ) ஸ்டீபன், தூத்துக்குடி சுந்தரவேல்புரம் பகுதியை சேர்ந்த மதியழகன் மகன் 2) முத்துசெல்வம், தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் 3) மதன்ராஜ், தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி பகுதியை சேர்ந்த தங்கமாரி மகன் 4) லெட்சுமணன் மற்றும் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த மைக்கேல் தனசாமி மகன் 5) தீபக் தயாளன் ஆகிய 5 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் 5 எதிரிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 12 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 37 பேர் உட்பட 179 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.என்பதுகுறிப்பிடத்தக்கது.

நிருபர்கள்.N.ராமசாமி,S.அய்யப்பன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.