மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் துரித நடவடிக்கையால் இதுவரை ரூபாய் 1,15,73,850/- மதிப்புள்ள 827 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் வழங்கப்பட்டுள்ளது



 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் in ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. மணி அவர்கள், காவல் ஆய்வாளர் திருமதி. R.பொன்மீனா மற்றும் 3 சார்பு ஆய்வாளர்கள், 9 காவல் ஆளிநர்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.





 இந்நிலையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில், மதுரை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவான மொபைல் போன் காணமல் போன வழக்குகளின் புகார்களில் கடந்த ஒரு  மாதத்தில் சைபர் கிரைம் காவல் நிலைய மூலம் ரூ- 7,10,000/- மதிப்புள்ள 50 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவபிரசாத் IPS அவர்களால்  27.08.2022 ந் தேதி உரிய நபர்களிடம் வழங்கப்பட்டது.

 மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் துரித நடவடிக்கையால் இதுவரை ரூபாய் 1,15,73,850/- மதிப்புள்ள 827 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

 மேலும் வங்கிகளிலிருந்து பேசுவதாக கூறி பொதுமக்களின் வங்கி கணக்கு விவரங்களை தெரிந்துகொண்டு நூதனமான முறையில் நடந்த திருட்டு வழக்குகளில் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் துரித நடவடிக்கையால் கடந்த ஒரு மாதத்தில் ரூபாய் ரூ-3,67,920/- மற்றும் இதுவரை ரூபாய் 31,93,650/- உரியவர்களுக்கு அவருடைய வங்கிக் கணக்கில் திரும்ப கிடைக்குமாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 இதுபோன்று மோசடியாக வங்கியிலிருந்து பேசுவதாக கூறி ஏமாற்றும் நபரிடம் விழிப்புணர்வோடு இருக்கவும் ரகசிய எண், வங்கி கணக்கு எண், CVV மற்றும் OTP போன்ற விபரங்களை முன்பின் தெரியாதவரிடம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும், மேலும் பண இரட்டிப்பு வாக்குறுதி அளிக்கும் Investment App -களை நம்பியும் ஆன்லைன் வேலைவாய்ப்பு வாக்குறுதியை நம்பியும் முன் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் மற்றும் குறைந்த அசலுக்கு அதிக வட்டி பெறும் ஆன்லைன் Loan App -களிடம் பணம் பெற்று ஏமாற வேண்டாம் என்றும், தெரியாத நபர்கள் இருந்து வரும் Video Call ஐ attend செய்ய வேண்டாம். Remote Access App களான Anydesk, Team Viewer போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் யாரேனும் மேற்கூறிய வகையில் பணம் இழக்க நேர்ந்தால் 1930 என்ற இலவச அழைப்பு எண்ணிற்கும், https://www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியிலும் 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம், என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.*


சைபர் கிரைம் மற்றும் காவல் உதவி செயலி பற்றி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.R. சிவபிரசாத் IPS அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Reporter.J.Bheemaraj.







Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.