தொழிலதிபர் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 05 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பு.


28.08.2022 திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 08.07.2022 ம்தேதி  தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்னமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த வில்வபதி (55)  மற்றும் வினோத்குமார் ஆகியோரை தொழில் விஷயமாக டெல்லிக்கு அழைத்து அவரை கடத்தி பணம் பறிக்க முற்பட்ட டெல்லியைச் சேர்ந்த ஜீர்வானி பாபு (48), முகமது ஆசாத் (29), முகமது சந்த் (எ) சோனு (25) மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆசிப் ஹுசைன் (47), முகமது கரீம் (32) ஆகிய 05 நபர்களை திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 இந்நிலையில் மேற்கண்ட 05 நபர்களின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் பரிந்துரையின் பேரில்  மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன், IAS அவர்கள் 05 நபர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். 

உத்தரவை தொடர்ந்து தாடிக்கொம்பு காவல் நிலைய போலீசார் ஜீர்வானி பாபு, முகமது ஆசாத், முகமது சந்த் (எ) சோனு, ஆசிப் ஹுசைன், முகமது கரீம் ஆகிய 05 நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

நிருபர்.P.சதீஷ்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

திருநெல்வேலி‌ மாவட்ட காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம்.SP.சரவணன்IPS.தலைமை.