உலகின் மிக நீண்ட பாய்மரப் படகு பயணத்தை நிறைவு செய்து சாதனை படைத்த கடலோர பாதுகாப்பு குழுமத்தினரை பாராட்டிய DGP.Dr.C.சைலேந்திரபாபுIPS
தமிழ்நாடு கடலோர பாதுகாப்புக் குழுவானது 3 பாய்மரப் படகுகளின் மூலம் மிக நீண்ட தூர "மரைன் போலீஸ் பாய் மர படகு பயணம் - 2022 "-னை 09.07.2022 அன்று துவங்கி சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்று சுமார் 540 கடல் மைல் தூரம் பயணித்து மீண்டும் 17.07.2022 அன்று சென்னை வந்தடைந்தது. இதன்மூலம், இந்திய பாய்மரபடகுச் சங்கத்தின் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்ற உலகின் முதல் காவல் படை என்ற பெருமையை தமிழ்நாடு காவல்துறை பெற்றுள்ளது.இச்சாதனையை படைத்த கடலோர பாதுகாப்பு குழுமத்தினரை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் முனைவர் செ. சைலேந்திரபாபு, IPS., அவர்கள் மனதார பாராட்டி, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
துணைஆசிரியர்.V.பிரபு.
Comments
Post a Comment