இரவு நேரங்களில் இயங்கும் வணிக வளாகம், உணவகம் போன்றவற்றை மூட காவல் துறையினர் வற்புறுத்தக் கூடாது - தமிழ்நாடு DGP.Dr.C.சைலேந்திரபாபு IPS அறிவுறுத்தல்.
தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947 -ன் படி 10-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்திய கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் (24×7) அனைத்து நாட்களிலும் இயங்கலாம் என தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அரசு ஆணை மற்றும் நீதிப் பேராணைகளை பின்பற்றுமாறு அனைத்து மாநகர காவல் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.அதேவேளையில் சட்ட விரோத செயல்களோ, தடை செய்யப்பட்ட செயல்பாடோ கண்டறியப்பட்டால் சட்டப்படி அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் .DGP.Dr.C. சைலேந்திரபாபு¸ IPS.¸ அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
துணைஆசிரியர்.G.ஶ்ரீநிவாஸன்.
Comments
Post a Comment