கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது காவல்குழுவினர் அதிரடி.



கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  திரு. பத்ரி நாராயணன் IPS அவர்கள் அரசால்  தடை செய்யப்பட்ட மற்றும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய போதை பொருட்களை விற்பனை செய்வோர்கள் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில் (20.07.2022) மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில்  காவல் ஆய்வாளர் திரு. நவநீதகிருஷ்ணன் அவர்கள் நடத்திய சோதனையில்  கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த காரமடையைச் சேர்ந்த மணிகண்டன்(25) மற்றும் முகமது அசாருதீன்(22) ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் 1.100 கிலோகிராம் எடையுள்ள  கஞ்சாவை பறிமுதல் செய்து, மேற்படி நபர்களை  நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

 இது போன்ற சட்டவிரோதமான செயல்களில்  ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

நிருபர்கள்.P.நடராஜன்,அப்பாச்சிமணி.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.