சேலம்மாநகரகாவல்துறைசார்பாக ஹோட்டல் லாட்ஜ் நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு அறிவுறுத்தல் கூட்டம்

 .

 05.07.2022 ம் தேதி காலை 11.00 மணிக்கு சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் தெற்கு திருமதி.S.P.லாவண்யா அவர்கள், சேலம் மாநகரத்தில் உள்ள ஓட்டல் மற்றும் லாட்ஜ் நிர்வாகிகளுக்கு காவலர் சமுதாய கூடத்தில் வைத்து பாதுகாப்பு அறிவுரைகள் வழங்கினார். 


இக்கூட்டத்தில் சேலம் மாநகரத்தில் குற்றங்களை குறைக்கவும், குற்றங்களை தடுக்கவும் மேலும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், சேலம் மாநகரத்தில் உள்ள ஓட்டல் மற்றும் லாட்ஜ் நிர்வாகிகளுக்கு  கீழ்காணும் அறிவுரைகள் வழங்கினார்.  1.லாட்ஜில் தங்குவர்களிடம் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை பெற்று பதிவேட்டில் பதிவு செய்யவேண்டும்.   2.அவர்கள் அளிக்கும் தகவல் உண்மைதானா என உறுதி படுத்தவேண்டும்.  3.லாட்ஜில் தங்குபவர்கள் சந்தேகப்படும்படியாக இருந்தால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 4. லாட்ஜில் தங்குபவர்களின் செயல்பாடுகள் சட்டதிற்கு புறம்பாக  தென்பட்டாலோ அல்லது சந்தேகப்படும்படியான நடவடிக்கையில் ஈடுபட்டாலோ உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

இவ் ஆலோசனை கூட்டத்தில் காவல் உதவி ஆணையாளர்கள் A.வெங்கடேசன், திரு.P.அசோகன்,  திரு.N.K.செல்வராஜ்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்புநிருபர்.S.ஆசிப்முகமது

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.