திருநெல்வேலி ரூ.1¼ கோடி மதிப்புள்ள 2½ ஏக்கர் நிலத்தின் ஆவணத்தை எடுத்து சென்று போலியான ஆவணம் தயார் செய்து, விற்பனை செய்த நிலத்தை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர்.


திருநெல்வேலி  மாவட்டம், மூன்றடைப்பு பகுதியை சேர்ந்த பார்வதி என்பவருக்கு சொந்தமாக மூன்றடைப்பில் 2½ ஏக்கர் நிலம் உள்ளது. பார்வதி கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், பார்வதியின் வீட்டில் இருந்த அசல் ஆவணத்தை வேலு என்பவர் எடுத்து சென்றும், வேலுவின்  தாயார் கனியம்மாள் போட்டோவை ஒட்டி, பார்வதி பெயரில் போலியான ஆதார்கார்டு தயார் செய்து, மேற்படி சொத்தை வேலுவின் மனைவி வெண்ணிலா பாரதிக்கு போலியான செட்டில்மென்ட் ஆவணம் தயார் செய்து நிலத்தை அபகரித்தும், அந்த நிலத்தின் போலி ஆவணத்தை வைத்து, வங்கியில் ரூபாய் 50 இலட்சம் கடன் பெற்றுள்ளார்கள். இதனை அறிந்த பார்வதி மகன் சிவசக்திவேல் மற்றும் வாரிசுகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன், IPS அவர்களிடம் மனு அளித்தனர். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு  பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயபால் பர்னபாஸ் அவர்களுக்கு உத்தரவிட்டதன் பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு ஆய்வாளர் திரு.மீராள்பானு, உதவி ஆய்வாளர்கள் திருமதி.மகேஸ்வரி,திரு.முருகன் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்,போலி ஆவணம் மூலம் வங்கியில் பெற்ற 50 லட்ச ரூபாய் கடனை வங்கியில் திரும்ப செலுத்தியுள்ளனர். விசாரணைக்கு பின்  சிவசக்திவேல் மற்றும் அவரது  உடன்பிறந்தோருக்கு  சொந்தமான 1¼ கோடி  மதிப்பிலான  2½ ஏக்கர் நிலத்தை மீட்டு அதற்கான ஆவணத்தை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P.சரவணன் IPS அவர்கள் நில உரிமையாளரிடம்  02.06.2022  மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.

இவ்வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு ரூபாய் 1¼ கோடி மதிப்புள்ள 2½ ஏக்கர் நிலத்தினை மீட்டு நிலத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்த திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு  பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P.சரவணன், IPS அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.

தலைமைநிருபர்.S.சண்முகநாதன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

திருநெல்வேலி‌ மாவட்ட காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம்.SP.சரவணன்IPS.தலைமை.